Saturday, August 26, 2006

இந்நிலையும்..


அதிகாலை தென்றலின் இனிமை,
முதல் பனித்துளியின் தூய்மை,
அந்த பனிமலரின் மென்மை,
இதில் எது நிகர்..
உன் வசீகர பார்வைக்குமுன்.

உன் ஏகாந்ததில் மூழ்கிடவே ஆசை,
உன்னுள் என்னை நிரப்ப,
அழைப்பாயோ மாட்டாயோ..
தொடரும் இத்தவிப்புகளுக்கு,
விடை தெரிந்தும் தெரியாமல் நான்.

என் மனதின் நடுக்கங்களும்,
என் செயலின் தடுமாற்றங்களும்,
உன் பிரியங்களின் வாசலில் நிற்க..
திசை மாறி தொலைந்துதான்போனேன்.

உன் அழகின் அமுதமா,
உன் விழியின் வெப்பமா,
உன் சொல்லின் சுவையா,
இதில் எது எனக்கு..
ஏதும் இல்லை என்றே சொல்கிறாய்.

சேராத இணை கோடுகளுக்கு தெரியும்,
இந்நிலையும் பரமானந்தம் தான் என்று.
உன் ருசி கண்டதில்லையென்றபோதினிலும்,
இந்நிலையும் பரவசம் தான் என்றென்றும்.

Thursday, August 17, 2006

என் வரமாய் நீ..


யாருக்கும் கிட்டுமோ இவ்வைரம்,
என்று தினம் தினம் நான் மெச்ச,

ஒரு கோடி அம்சங்கலுடன்,
எனக்காகவே நீ பிறக்க‌‌,

ஒரு லட்சம் கனவுகளுடன்,
உனக்காகவே நான் இருக்க,

சின்னஞ்சிறு மலராயினும்,
எல்லையில்லாமல் கற்பிக்கிறாய்,

துளி தீர்த்தமாயினும்,
திருப்தியாய் தாகம் தீர்க்கிறாய்,

என் வரமாய் நீ வர‌,
மீண்டும் இறை நம்பிக்கை பிறக்கிறது,

மழையாய் நீ மழலை பேச,
மீண்டும் பிள்ளை பருவம் புரிகிறது,

உன் மரகத சிரிப்பினில்,
மருந்தின்றி மனமும் குணமாகிறது,

என் பளிங்கு சிற்பமாய் நீ,
என் அதிசயமாய் நீ,
என் ஆசைகளின் உருவமாய் நீ,
என் அடைக்கலமாய் நீ,

என் ஆனந்ததின் எல்லையாய் நீ,
என் அமிர்தமாய் நீ,
என் வாழ்வின் அர்த்தமாய் நீ,
நான் வாழ காரணமாய் நீயே,

என் கண்மணி உன்னை,
நாளும் நாளும் விதவிதமாய்,
முடிந்தவரை ரசிப்பேன்,
தெரிந்தவரை சீராட்டுவேன்,
இறுதிவரை கொண்டாடுவேன்..

Tuesday, August 15, 2006

என்னில் நீ நிறைந்தால்..


என் அளவில்லா அன்பினில் நனைகையில்,
உனக்கு என்னென்ன தோன்றுமோ..

இத்தனை அழகையும் கண்டதில்லை நான்,
இத்தனை அறிவையும் அறிந்ததில்லை நான்,

என்றென்றும் மறையாமல் நீயே,
என் கண்ணிண் ரத்தினமணியாக‌,

என்றென்றும் தேயாமல் நீயே,
என் வானின் வெள்ளி நிலவாக,

தொடரும் உன் இம்சைகளில்,
என் உறக்கம் தொலைந்தது,

குறையாத உன் குறும்புகளில்,
என் தனிமையும் தீர்ந்தது,

உன் அழுகையின் ஆழத்தில்,
எனக்கு ஏனோ பசிக்கவும் இல்லை,

உன் அடங்களின் அழகில்,
எனக்கு நீ சலிக்கவும் இல்லை,

என் பொறுமையின் எல்லை என்ன,
எனக்கே தெரியவில்லை,

என்னில் நீ நிறைந்தால்,
காதலின் ஸ்பரிசங்கள் கூட தேவையில்லை..

Tuesday, August 08, 2006

உன்னையும் தாண்டி..


இன்னும் எத்தனை எத்தனை ஆசைகள்,
தீராது போல், உன் மேல் நான் கொண்ட காதல்,

தேங்கி கிடக்கின்றன ஒரு கோடி ஏக்கங்கள்,
மேலும் பல ஜென்மங்களுக்கும் போதுமானதாய்,

சொல்ல ஆயிரம் உண்டென்றபோதினிலும்,
விழியோரம் சில துளிகள்,சொல்லட்டும் மிச்சத்தை,

என் கண்களில் நீ, என் கனவுகளிலும் நீ,
என் எழுத்துக்களில் நீ, என் பேச்சிலும் நீ,

என் வெட்கத்தில் நீ, என் நானத்திலும் நீ,
என் புன்னகையில் நீ, என் மகிழ்ச்சியிலும் நீ,

என் நெஞ்சினில் நீ, என் சிந்தையிலும் நீ,
என் மடியினில் நீ, என் எல்லாவற்றிலும் நீயே,

அப்பப்பா போதும் போதும் நீ படுத்தும் பாடு,
உன் சுடரின் வெப்பத்தில் நான் உருகும்முன்,

உன்னையும் உன் தித்திப்பினையும் தாண்டி,
என் எண்ணங்கள் உயர வேண்டும்,

உன்னையும் உன் ஈர்ப்பினையும் தாண்டி,
என் எழுத்துக்கள் வளர வேண்டும்,

உண்மையில் நானும் சவுக்கியம்தான்,
உன் நினைவுகள் என்னை தீண்டும்வரை..

உண்மையில் நானும் சுகம்தான்,
உன் கனவுகள் என் ஆவலை தூண்டாதவரை..

Saturday, August 05, 2006

நீ இன்றி..


தாய் மொழியாம், தாய் நாடாம்,
இவற்றுக்கெல்லாம் எதோ தனிச்சிறப்பு உண்டாம்,
எனக்கு ஏனோ தெரியவில்லை.

சர்க்கரைக்கட்டியும் வெல்லக்கட்டியும் இனிக்குமாம்,
இதையும் நான் உணரவில்லை.

இது என்ன விந்தை, தவம் புரியும் சித்தனைப்போல்,
உலகம் மறந்து, உணர்வு மருத்து,
இப்படி ஆகிவிட்டேனே.

காதலித்து பார்! இதெல்லாம் புரியும் என்றனர்,
இல்லை இல்லை! இதென்ன சுத்த பேத்தல்,
அழகான காதலில் ரசனைகள் கூடுமல்லவோ.

காதலின் அருமை உன் பிரிவில் உணர்ந்தேன்,
நீ இல்லா தோழமையில் எல்லாம் மறந்தேன்,
என்னையும் சேர்த்து தான்.

Friday, August 04, 2006

உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..


உன்னை பார்க்க வேண்டும்,
என்னுடனே நீ வேண்டும்,
எப்பொழுதும் நீ வேண்டும்,
நம் கனவுகளை பேச வேண்டும்,
நேரம் ஓடாமல் நிற்க வேண்டும்,
இப்படி இத்தனை தோன்றுகிறது,
உன்னை நினைக்கும் போதெல்லாம்.


மிக அருகில் நீ வேண்டும்,
உன் கைகளை பற்ற வேண்டும்,
உன் முகத்தை தொட வேண்டும்,
உன் காதலில், மழைச் சாரலில்,
திகட்ட திகட்ட நனைய வேண்டும்,
இப்படி இத்தனை பரவசம்,
உன்னை சிந்திக்கும் போதெல்லாம்.

இது எதுவும் சாத்தியம் இல்லை.. தெரியும் எனக்கு.
என் மனமோ, தெரிந்தும் புரிந்துகொள்ள மறுக்கிறது,
எவ்வளவு ஏக்கம் தான் அதற்கு,
இன்னும் உன்னையே சுற்றி சுற்றி வருகிறதே,

அடையாத சமாதானம், கிடைக்காத சந்தோஷம்,
எனினும் உன்னையே என் மனம் ஆவலுடன் நாட‌,
இங்கு செய்வதறியாது திண்டாடுவது நானல்லவோ,
என் எதிரிக்கும் வேண்டாம் இந்நிலை!

கையைச்சுடும் என்றாலும் தீயை தொடும் பிள்ளை போல்
உன்னையே மீண்டும் நினைக்கிறேன்..

என்றும் திகட்டாமல் என் மனதில் நீ வசிக்க,
ஒரு துளி இன்பம், ஒரு முறை போதும்,
பாவம் இவ்வளவு அல்லல் படும் என் மனம்,
உன் தேன் சுவையில் ஒரு முறை நனையட்டுமே!

உனக்காகவே..


காதலும் கற்று மற என்று யாரோ சொல்லக் கேட்டேன்.
மறக்கத்தான் வேண்டுகிறேன்.. எல்லாவற்றையும்

உன்னால் தானே காதலிக்க கற்றேன்.
உன்னையும் கூட மறக்க இயலுமா என்னால்..

இன்று உன்னை இப்படி பார்க்க ...
நான் உன்னை மறந்தே இருக்கலாம் என்றோ!

நான் எப்படி மறப்பேன்..
உன்னை விட்டுக்கொடுக்க துணிந்த என் மனதை..
நீ என் அருகில் இல்லாததை உணர மறுக்கும் என் அறிவை..
மொத்ததில் நீ இன்றி பழகிக்க தெரியாத என்னை..

வேரொரு கைகளில் நீ..
மறந்தே போவேனோ..இல்லை மடிந்தே போவேனோ..


View Stats