இந்நிலையும்..

அதிகாலை தென்றலின் இனிமை,
முதல் பனித்துளியின் தூய்மை,
அந்த பனிமலரின் மென்மை,
இதில் எது நிகர்..
உன் வசீகர பார்வைக்குமுன்.
உன் ஏகாந்ததில் மூழ்கிடவே ஆசை,
உன்னுள் என்னை நிரப்ப,
அழைப்பாயோ மாட்டாயோ..
தொடரும் இத்தவிப்புகளுக்கு,
விடை தெரிந்தும் தெரியாமல் நான்.
என் மனதின் நடுக்கங்களும்,
என் செயலின் தடுமாற்றங்களும்,
உன் பிரியங்களின் வாசலில் நிற்க..
திசை மாறி தொலைந்துதான்போனேன்.
உன் அழகின் அமுதமா,
உன் விழியின் வெப்பமா,
உன் சொல்லின் சுவையா,
இதில் எது எனக்கு..
ஏதும் இல்லை என்றே சொல்கிறாய்.
சேராத இணை கோடுகளுக்கு தெரியும்,
இந்நிலையும் பரமானந்தம் தான் என்று.
உன் ருசி கண்டதில்லையென்றபோதினிலும்,
இந்நிலையும் பரவசம் தான் என்றென்றும்.

5 Comments:
சேராத இணை கோடுகளு....
endru ezhuthi athuku etrathu pol oru picture!! wow
you know what, i first noticed tht gal in the picture and then only saw those tracks :-)
Another good one!
-= Kaanthi thaatha
gud..thts a keen observation!..btw..thaatha ooru california thana:)
Malaria ...Diarrhoea kelvi patu irukane, aaanal california theryaathu.
naan kaali koil irukum ooril thaan irukane.
-= Kaanthi Thaatha
காந்தி தாத்தா comment படிச்ச பிறகு தான் கவனித்தேன் அந்த ரயில் தடத்தை! Good photo selection to go with this good kavithai :)
thnks thaatha...thnks mugilan:)
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home