Sunday, December 17, 2006

சலனம் தாக்கி..


கையில் பிள்ளையுடன் அவள், மகனுடன் அவன்,
எதேச்சயாய் அந்த ரயிலில் சந்திக்க..
பார்வைகள் மோதிபோனது..

ஆச்சரியத்தின் எல்லையோ இது..
இல்லை..சலனம் தாக்கி இதயம் பிசைகிறதே..

மனமாகி பிள்ளையும் உண்டே..
இத்தனை அதிர்வுகள் கண்டதில்லை முன்னே..

இருபதின் முதல் பரவசம் போல்..
மீண்டும் பார்க்க ஏங்கி..

தப்பென்றும் தவறென்றும் உணர்ந்தும்..
தொல்லையும் விளைவும் புரிந்தும்..

என்ன விந்தை இது..
அபாயமான ஈர்ப்பல்லவோ இது..

பேச வாய்ப்பிருந்தும் பேசாமல்..
கலங்கின குட்டையாய் இரு மனங்கள்..

இயர்க்கையின் சீற்றமோ..
பாவங்களின் பலனோ..
தவிப்புகளின் தொடக்கமோ..
இறைவனின் சிக்கல்களில் ஒன்றோ..

ஏதென்று விளங்காமல்..
என்ன செய்வார்கள் பாவம்..
சலனம் தாக்கி இதயம் பிசைகிறதே..


View Stats