Monday, September 25, 2006

ஒரு முறை வா..


அந்த‌ அழகிக‌ளும் அழ‌க‌ல்ல‌ உன்னைவிட‌,
மின்னும் வைர‌ங்க‌ளும் தூய்மைய‌ல்ல‌ உன்னைவிட‌,

மெலிந்து தேய்ந்தாலும்..
சந்தன சிற்பம் தோற்குமே உன் பக்கத்தில,

இன்னும் எத்தனை சொல்ல..
உன் அருகாமைகள் உணர்த்திய‌ அற்புத‌ங்களை,

நீ இன்றி பிழைக்க‌வும் முடியுமோ,
நீ இன்றி வாழ்க்கையும் தொட‌ருமோ,

என் வெறுமைகளை வெல்லவே ஒரு முறை வா,
என் த‌னிமைகளை தொலைக்க‌வும் சொல்லித்தா,

நீ வேண்டும் வேண்டும் என்று..
மீண்டும் மீண்டும் கேட்கும் பிள்ளைகள்,

இந்த ம‌ழ‌லைக‌ளின் மொழிகளை..
கேட்டுப்போக‌ ஒரு முறை வா,

இத்தனை அள‌வில்லா அன்பினை..
பார்த்து ம‌லைத்து க‌லைத்து..
அந்த சொர்க்க‌மும் அனுப்பிடுமா உன்னை..
கேட்டுச்சொல் அன்பே.

Friday, September 01, 2006

உன் பக்கத்தில்..


உன் தோளில் படிந்த மலர் மாலை,
உன்னால் மேலும் அழகாக தெரிய,
உன்னை தொட்ட‌தில் சொக்கி,
மேலும் மேலும் மலர,

உன் வாசத்தில் மயங்கி,
மேலும் மேலும் மனம் வீச,
உன் வெட்கத்தில் நாணி,
மேலும் மேலும் சிவக்க,

கண்களும் விட்டு விலக மறுக்கும்,
காண கிடைக்காத காட்சியோ இது,

இலை மறை காயாக,
உன் வேல்விழிகள் அவனை நாட,

பெருமை கொள்ளாமல் அவன்,
உன் கரம் பற்றும் ஆர்வத்தில்,
உன் சேலை தொடும் அவசரத்தில்,
தன்னிலை மற‌ந்தான்,

மோகத்தின் உச்சியில் அவன்,
கை கொள்ளா உன் பேரழகையும்,
கண் கொள்ளா உன் செழிப்பினையும்,
ரசித்து ரசித்து மாய்ந்தான்,

அந்த கண்ணண் வாய்ச்சுவை அறிய,
அவன் சங்கிடம் கேட்க வேண்டுமாம்,
உன் எல்லையில்லா அருமைகளை அறிய,
என்னிடம் அல்லவா கேட்க வேண்டும்,

உன் இனிமைகளில் சிலிர்த்தவன் நான்,
உன் பார்வைகளில் லயித்தவன் நான்,
உன் விரல் தொட காத்திருந்தவன் நான்,

மனமேடையும் ஏமாந்து ஏங்குமே,
உன் பக்கத்தில் என்னை காணாமல்,
ஜென்மங்களும் மீண்டும் மாறுமே,
உன் பக்கத்தில் என்னை அமர்த்துமே.


View Stats