இம்முறை சோகமில்லை..

உன் நினைவின் தொல்லையில்..
பசி மறந்த நிலை,
உன் கனவின் தொல்லையில்..
உறங்கவே இல்லை,
கோடி கோடி எண்ணங்கள்..
தேடி தேடி கொன்றதே,
என் மனதின் ஆசைகள்..
என் உயிரின் ஓசைகள்..
நீ வேண்டும் என்றதே,
மெதுவாய் மெதுவாய்..
உன் சுவாசத்தில் நான்,
உன் மாயிலை பாதம்..
என் திசை நடக்க,
கண் கண்ட கனவுகள்..
இன்று பலிக்க,
"குறை ஒன்றும் இல்லை.."
பாட இதழ் துடிக்க,
நான் ரசிக்கும் நீ..
எனதாக,
இதனினும் களிப்பில்லை,
விழிகளை மீறும் ஈரம்..
இம்முறை சோகமில்லை.
