நிஜமாய் நீ இல்லை..

அந்த மழையில், நீ தந்த குடையில்..
ஈரமா அனலா ,ஏதுமே புரியவில்லை,
கத்தி முனையில், நிற்கவா நடக்கவா..
தெரியாமல் தடுக்கித்தான் விழுந்தேன்,
அன்பே அன்பே என்று உருகி உருகி..
வழியும் மெழுகாகித்தான் போனேன்,
காதலும் அலுக்குமோ சலிக்குமோ..
இரெண்டுமே நிஜமானதே,
போதுமே இத்தனையும்..
என்றுமே தித்திக்கும் நீ கூட..
திகட்டித்தான் போனாய்,
வலி வலி என்று கதறி கதறி..
மௌனமாய் உன்னை மறந்தே போனேன்,
உணர்ந்தேன், தெளிந்தேன், வாழ்கிறேன்..
கனவா கற்பனையா..இல்லை இல்லை..
நிஜமாய் நீ இல்லை என்னருகில்.
