உன் பக்கத்தில்..

உன் தோளில் படிந்த மலர் மாலை,
உன்னால் மேலும் அழகாக தெரிய,
உன்னை தொட்டதில் சொக்கி,
மேலும் மேலும் மலர,
உன் வாசத்தில் மயங்கி,
மேலும் மேலும் மனம் வீச,
உன் வெட்கத்தில் நாணி,
மேலும் மேலும் சிவக்க,
கண்களும் விட்டு விலக மறுக்கும்,
காண கிடைக்காத காட்சியோ இது,
இலை மறை காயாக,
உன் வேல்விழிகள் அவனை நாட,
பெருமை கொள்ளாமல் அவன்,
உன் கரம் பற்றும் ஆர்வத்தில்,
உன் சேலை தொடும் அவசரத்தில்,
தன்னிலை மறந்தான்,
மோகத்தின் உச்சியில் அவன்,
கை கொள்ளா உன் பேரழகையும்,
கண் கொள்ளா உன் செழிப்பினையும்,
ரசித்து ரசித்து மாய்ந்தான்,
அந்த கண்ணண் வாய்ச்சுவை அறிய,
அவன் சங்கிடம் கேட்க வேண்டுமாம்,
உன் எல்லையில்லா அருமைகளை அறிய,
என்னிடம் அல்லவா கேட்க வேண்டும்,
உன் இனிமைகளில் சிலிர்த்தவன் நான்,
உன் பார்வைகளில் லயித்தவன் நான்,
உன் விரல் தொட காத்திருந்தவன் நான்,
மனமேடையும் ஏமாந்து ஏங்குமே,
உன் பக்கத்தில் என்னை காணாமல்,
ஜென்மங்களும் மீண்டும் மாறுமே,
உன் பக்கத்தில் என்னை அமர்த்துமே.

6 Comments:
மனமேடையும் ஏமாந்து ஏங்குமே,
உன் பக்கத்தில் என்னை காணாமல்,
romba nalla iruku, climax romba sooper!!
oru kalyana panthalil iruntha feeling, enaku
ok, this is just for fun.
To make a line look bigger draw a small line next to it.
உன் தோளில் படிந்த மலர் மாலை,
உன்னால் மேலும் அழகாக தெரிய,
then?
haha..mikka nandri cva..
btw..iru kodugal thathuvam ellam en heroine ku implement pannatha ..
venumna onnu sollallam..en blog oda azhaga koota ellarum un blog ayum paakanum..appo thaan ennodathu highlight aagum;)
lol @ lp's comment :)
:)
Dhanush appa va aaga poranamay?
-= Kaanthi thaatha
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home